Breaking News

இலங்கைத் தமிழ்ப் பெண் இந்தியாவில் தீக்குளித்து தற்கொலை !!

இந்தியாவின் கும்மிடிப்பூண்டி அகதிகள் காப்பகத்தில் வசித்துவந்த இலங்கைத்தமிழ் பெண்ணான சரோன் கருண்சி (27) என்பவரே தீக்குளித்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது இவர் யாழ்ப்பாணம், குருநகர் ஓடக்கரை வீதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் தமது கணவர் உடனும் தனது ஒன்றரை வயது நிரம்பிய குழந்தையுடனும் குறித்த அகதி முகாமில் வசித்து வந்துள்ள நிலையில், கடந்த சனிக்கிழமை தமது வீட்டில் தீமூட்டிக்கொண்டநிலையில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனளிக்காது உயிரிழந்துள்ளார். 

எவ்வாறாயினும் இதுவரையிலும் தற்கொலைக்கான காரணம் கண்டறியப்படவில்லை என்பதால், கும்மிடிப்பூண்டி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.