Breaking News

இறந்த தாயை அடக்கம் செய்யும்போது சவப்பெட்டியில் பிறந்த அதிசய குழந்தை!!

கனடாவின் டொரன்டோ நகரை சேர்ந்தவர் ஜெனிபர். இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோது ஒரு நாள் மருத்துவபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு காரில் சென்றார். காரையும் ஜெனிபரே ஓட்டி சென்றார். சாலையில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி மரத்தின் மீது மோதியது.

மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஜெனிபர் உயிரிழந்தார். தாய் இறந்து விட்டதால் வயிற்றில் இருக்கும் குழந்தையும் இறந்து விடும். எனவே மருத்துவர்கள் பரிசோதித்தும் குழந்தை இறந்து விட்டதாக சான்றிதழ் அளித்தார்கள்.

இதனை தொடர்ந்து சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ஜெனிபரின் உடல் மறுநாள் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அதற்குள் 24 மணி நேரம் கழிந்து விட்டது. பின்னர் இறுதி சடங்குகள் முடிந்து ஜெனிபரின் உடல் சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்யும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

சவப்பெட்டியை குழியில் இறக்கும்போது குழந்தையின் அழுகுரல் கேட்டது. உறவினர்கள் திகைத்து நின்றனர். மேலும் கவனித்தபோது அந்த குழந்தையின் அழுகுரல் சவப்பெட்டியில் இருந்து வந்தது கண்டு ஆச்சரியம் அடைந்தனர். உடனே சவப்பெட்டியை உடைத்து பார்த்தபோது உள்ளே இறந்த ஜெனிபரின் வயிற்றில் இருந்து குழந்தை பிறந்து அழுது கொண்டிருந்தது.

இதனை பார்த்த உடனே ஆச்சரியம் உறவினர்கள் உடனடியாக டாக்டர்களை வரவழைத்தனர். அவர்கள் ஜெனிபரின் உடலில் இருந்து குழந்தையை பிரித்தெடுத்தனர். அந்த குழந்தை தற்போது ஆரோக்கியமாக வளர்ந்து 7 வயதை எட்டியுள்ளது. இது மருத்துவ உலகில் ஒரு ஆச்சரியம் என டாக்டர்கள் தெரிவித்தனர்.