Breaking News

சந்திரிக்கா மற்றும் சுமந்திரன் போன்றோர் சிங்கள தொலைக்காட்ச்சியில் தோன்றுவதால் பௌத்தர்களுக்கு ஆபத்து;கம்மன்பில !!

களனியில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த உதய கம்மன்பில சந்திரிக்கா இலங்கையில் ஏதோ ஒரு வழியில் பெடரல் முறைமையை  கொண்டு வருவதற்கான முயற்சிப்பதனால்  பௌத்தர்களுக்கு நேரலாம் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் ஜனாதிபதியும் பிரதமரும் தெரிவித்து வருகின்ற போதிலும்  பௌத்த மதத்துக்கு எவ்வகையிலும் பாதிப்பு வர அனுமதிக்க மாட்டோம் என ஜனாதிபதியும் பிரதமரும் தெரிவித்து வருகின்ற போதிலும் சந்திரிக்காவின் நடவடிக்கைகளும் சுமந்திரன் போன்றவர்கள் சிங்கள தொலைக் காட்சியில் தோன்றி சிங்களமொழியிலே நாட்டில் பௌத்தத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் முன்னுரிமையைக் கேள்விக்குள்ளாக்கி வருவதாகவும் இவர்களில் யாரை நம்புவது என்பது தொடர்பில் பௌத்தர்கள் ஆபத்தை எதிர்நோக்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.