Breaking News

ஜெயவர்த்தனவை வியப்பின் உச்சிக்கே கொண்டுசென்ற தகவல்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டகாரர் மகிளா ஜெயவர்த்ன. இவர் விமான பணிப்பெண்ணான கிறிஸ்டினா மல்லிகா சிறிசேனவை கடந்த 2005ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் காதலித்த காலத்தில் மல்லிகா தனது பிறந்த நாளை ஜெயவர்த்தனவின் வீட்டில் கொண்டாடி உள்ளார். பின்னர் இந்த சம்பவத்தை டென்மார்க்கில் உள்ள தனது பாட்டியிடம் தெரிவித்து உள்ளார். அப்போது அதே தினத்தில்தான் எனது பிறந்தநாளும் வருகிறது என்று பாட்டி கூறி உள்ளார்.

மேலும் அவரது பாட்டி கூறும்போது, தாத்தாவின் பிறந்த நாளும் அதே தினத்தில்தான் வருகிறது என்று கூறியுள்ளார். இந்த தகவலை ஜெயவர்த்தனேவிடம் மல்லிகா தெரிவிக்க அவர் எப்படி ஒரே குடும்பத்தில் 3 பேருக்கு பிறந்தநாள் வருகிறது என்று வியப்பின் உச்சிக்கே சென்று விட்டாராம். இந்த விஷயத்தை மல்லிகாவே ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.