Breaking News

உண்மையிலே மலேஷிய தூதுவர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் யார் ?

மலேஷியாவிற்கான இலங்கைத் தூதுவர் இப்ராஹிம் சகீப் அன்சாரி மீதும் மலேசியாவில் உள்ள பௌத்த விகாரையின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல்களோடும், மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக இடம்பெற்ற சம்பவங்களோடு இலங்கையர்கள் எவரும் தொடர்புப்படவில்லை என்னும் தகவலை மலேஷியப் புலனாய்வுத்துறை தகவல்கள் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் குறிப்பிட்ட தாக்குதல்களில்  தொடர்புடையவர்கள் அனைவரும், தென்னிந்தியாவிலிருந்து மலேஷியாவுக்குச் சென்றவர்கள் என்பதுடன் அவர்களில் சிலர் மலேஷியாவின் சீரோ தர்ட்டிசிக்ஸ் என்ற பாதாள உலகக் கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் எனவும் மலேசிய புலனாய்வு பிரிவினரின் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.