மலேஷியாவிற்கான இலங்கைத் தூதுவர் மீது தாக்குதல் !!!
மலேஷியாவிற்கான இலங்கைத் தூதுவர் மற்றும் உதவிச்செயலாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்த இருவரும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மலேஷியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டு அங்கு சென்றிருக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களால் இலங்கை தூதுவரிடம் மகிந்த எங்கே என வினவியதற்கு தூதுவர் பதிலளித்ததால் ஆத்திரமடைந்த ஆர்பாட்டக்காரர்களே இத்தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.