மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையில் இருந்து தப்பியோடிய கைதி கைது !!
மட்டக்களப்பு சிறைச்சாலைக் கைதியொருவர் தாம் சுகவீனமுற்றறுள்ளதாக கூறி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த வேலையில் தப்பிச்சென்ற அவரை நேற்று(4) மீண்டும் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவிகின்றனர். குறித்த நபர் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஏறாவூர் மிச்நகர் கிராமத்தைச் சேர்ந்த முபாறக் கசீர் (வயது 24) ஆவார்.என தெரிவிக்கப்படுகின்றது.