Breaking News

சுதந்திரக் கட்சியின் சம்மேளனத்தில் நிறைவேற்றப்பட்ட ஏழு தீர்மானங்கள் !

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65ஆவது சம்மேளனத்தின் போது நிறைவேற்றப்பட்ட  ஏழு தீர்மானங்களாவன ; 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஆதரவாளர்களை பாதுகாப்பதற்காக நேர்மையாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றம் பொறுப்புகளுக்காக கௌரவம் செலுத்த வேண்டும்.

அரச சொத்துக்களை தனியார் மயப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தல் மற்றும் நட்டமடையும் நிறுவனங்களை மீளமைத்தல். 

மேலும், இடதுசாரி முற்போக்கு சக்திகளை ஒன்றுதிரட்டுதல் மற்றும் சகோதரத்துவத்தை மேம்படுத்தல் 

இனங்களுக்கிடையே ஐக்கியம், நல்லிணக்கம் மற்றும் அரசியலமைப்பு தொடர்பான தீர்மானமும் 

கடந்த ஒன்றரை வருட காலத்தில் முன்னெடுக்கப்பட்ட சரியான ஆட்சியை பாராட்டுவது தொடர்பில் ஒரு தீர்மானமும், 

வறுமை ஒழிப்பு தொடர்பான தீர்மானமும் 

சர்வதேச வெற்றிகளுக்காக பாராட்டு தெரிவிக்கும் தீர்மானமும் இதன்போது நிறைவேற்றப்பட்டன.

இதன்பின்னர் சுதந்திரக் கட்சியின் நினைவு மலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டதுடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினது mobile appஉம் ஜனாதிபதியால் அறிமுகப்படுத்தபட்டது.