Breaking News

கோல்டன் கீ நிறுவனத்தில் வைப்பிலிட்ட 450 பேரின் பணத்தை மீளளிப்புச்செய்ய நடவடிக்கை !!

கோல்டன் கீ நிறுவனத்தில் வைப்புச்செய்திருந்த 450 பேரின் பணத்தினை திருப்பிச் செலுத்துவதகாக ரூ. 4 பில்லியனை மத்திய வங்கிக்கு வழங்குவதற்கு அமைச்சரவை இணங்கியுள்ளதுடன் கோல்டன் கீ நிறுவனத்துக்குச் சொந்தமான சொத்துக்களையும் விடுவிப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. மேலும் குறித்த நிறுவனத்தில் 10 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையை வைப்பிலிட்ட 450 பேரின் பணத்தினை மீளளிப்புச் செய்வதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுவதாக தெரிவிக்கப்படுகின்றது.