Breaking News

பௌசிக்கு நீதிமன்ற அழைப்பானை !

இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள வழக்கு தொடர்பான விசாரணைக்கென எதிர்வரும் 28ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு இராஜாங்க அமைச்சர் ஏ.எச.எம்.பௌசிக்கு   கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய, இன்று (7) அழைப்பானை ! அனுப்பியுள்ளார். குறித்த அமைச்சர் அனர்த்த முகாமைத்துவ அமைச்சராக பதவி வகித்த காலத்தில் அமைச்சுக்கு சொந்தமான 1 கோடி 90 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஜீப் வண்டியை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டிலேயே இவ்வழக்கு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .