Breaking News

கிழக்கு மாகாண கல்வியயற் கல்லூரி ஆசிரியர்களுக்கான நியமனம் தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் வியாழக்கிழமைக்குள் !!!

வௌி மாகாணங்களில் நியமனம் பெற்றுள்ள கல்வியியற் கல்லூரிகளில் கற்கை நெறியை பூர்த்தி கிழக்கு மாகாண ஆசிரியர்களின் நியமனம் தொடர்பான இறுதித் தீர்மானம்  எதிர்வரும் வியாழக்கிழமைக்குள் அறிவிக்கப்படும் என கிழக்கு  மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹ்மட்  நம்பிக்கை வௌியிட்டுள்ளார்

உரிய அதிகாரிகள்  தற்போது இது தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதுடன் அனைத்து ஆசிரியர்களுக்கும் சாதகமானதொரு சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கான முழுமையான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் குறிப்பிட்டுள்ளார்

இதற்கான சாதகமான காய்நகர்த்தல்கள் நடைபெற்று வருவதாகவும் கிழக்கிலிருந்து வௌி மாவட்டங்களுக்கு நியமனம் பெற்றுள்ள எதிர்வரும் வியாழக்கிழமைக்குள் நற்செய்தி கிடைக்கும் சாத்தியமுள்ளதாகவும் முதலமைச்சர் கூறினார்

அத்துடன் வௌி மாகாணங்களுக்கு நியமனம் பெற்றுள்ள  கல்வியியற் கல்லூரி ஆசிரியர்களின் விபரங்கள் மற்றும் முதலமைச்சரின் கோரிக்கை கடிதம் ஆகியன பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன

அத்துடன் கிழக்கின் பாரிய ஆசிரியர் வெற்றிடம் குறித்தும் பிரதமர் விசேட கவனம் செலுத்துவார்  என முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹ்மட் நம்பிக்கை வெ ளியிட்டுள்ளார்