Breaking News

வெள்ளி நள்ளிரவுமுதல் மருந்து பொருட்களின் விலைகுறைக்கப்படும் !!

எதிர் வரும் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் மருந்து பொருட்களின் விலை குறைக்கப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார். இதற்கமைவாக 48 வகையான அத்தியாவசிய மருந்துப்பொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளன. குறித்த 48 வகையான மருந்துகளில் நாட்டில் அதிகமாக காணப்படும் நோய்களான நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம்,  இதய நோய், வலிப்பு, ஆஸ்துமா, மன நோய் மற்றும் வலி நிவாரணி மருந்துகள் என்பன அடங்குவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.