Breaking News

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் மரணம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கவும் !!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பிரிவு மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், பாரபட்சமற்ற விசாரணைகளை முன்னெடுக்கும்படி உரிய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மரணமடைந்த மாணவர்களில் ஒருவரின் மார்பில் துப்பாக்கிச்சூடு நடாத்தப்பட்டுள்ளதைத்தொடர்ந்தே இடம்பெற்ற விபத்திலேயே மற்றய மாணவரும் மரணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் தொடர்பில் 5 போலீசார் பணிநீக்கம் செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.