மட்டக்களப்பில் சட்டவிரோத வர்த்தகத்திலீடுபட்ட 11 வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை !
மட்டக்களப்பு மாவட்டத்தில் வர்த்தக நிலையங்களில் நேற்று நடாத்தப்பட்ட சுற்றிவளைப்பில் சட்டத்திற்கு முரணான வகையில் உபயோகப்படுத்தப்பட்ட முத்திரையிடப்படாத நிறுத்தல் மற்றும் அளத்தல் கருவிகளை பவித்த கடை உரிமையாளர்களும், நிறைகுறைவான பாண் மற்றும் வெதுப்பக பொருட்கள் விற்பனை செய்த பேக்கரி உரிமையாளர்களுமாக மொத்தம் 11 வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டு வழக்குதாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நியமங்கள் சேவைகள் திணைக்கள் பொறுப்பதிகாரி ஏ.எல்.நௌசாத் தெரிவித்துள்ளார்.