Breaking News

பாகிஸ்தானில் இருந்து வந்த புறா கைது!

பஞ்சாப் மாநிலம் பதன்கோட் எல்லையில் சாம்பல் நிற புறா ஒன்று வெள்ளைத் தாளை ஏந்தியவாறு பறந்து வந்தது. இதனைபார்த்த பாதுகாப்பு படை வீரர்கள், அந்த புறாவை லாவகமாக பிடித்தனர்.

அது ஏந்தி வந்த கடிதத்தில் பிரதமர் நரேந்திரமோடிக்கு  உறுதி மொழியில் எச்சரிக்கை வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.

அதில், “எங்களை 1971ஆம் ஆண்டு இருந்தவர்களைப் போல் நினைத்து விடாதீர்கள். தற்போது பாகிஸ்தானில் உள்ள குழந்தை கூட இந்தியாவிற்கு எதிராக போராட தயாராக இருக்கிறது” என எழுதப்பட்டிருந்தது.

அந்த கடிதத்தை போலீசாரிடம் ஒப்படைத்த போலீசார், புறாவையும் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அந்த புறாவை போலீசார் கஸ்டடியில் வைத்துள்ளனர்