Breaking News

இலங்கை வரலாற்றில் முதல்தடவையாக ஜனாதிபதி தலைமைதாங்கும் தமிழ் மொழித் தின விழா இன்று !

அகில இலங்கை தமிழ் மொழித் தின விழா இன்று (23) கண்டி தர்மராஜ கல்லூரியில்ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் தமிழ் மொழித்தினத்தையொட்டி அகில இலங்கை ரீதியாக இடம்பெற்ற  போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவியர் விருது வழங்கி மகிழ்விக்கபடவுள்ளனர்.

குறித்த நிகழ்வில், கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க உட்பட மேலும் பல அதிதிகள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இலங்கை வரலாற்றில் தமிழ் மொழித்தின விழாவிற்கு ஜனாதிபதி தமையேற்றப்பது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.