மகனுக்கென இந்த வேலையை செய்தாரா ரொனால்டோ !
கால்பந்தாட்ட நாயகன் ரொனால்டோ தன்னுடைய செல்ல மகனுக்காக பந்துகளை எடுத்துப் போடும் பணியை செய்துள்ளார்.
போர்த்துக்கல் நாட்டை சேர்ந்தவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, இவருடைய மகன் கிறிஸ்டியானோ ஜீனியர்.
இவருக்கும் கால்பந்தாட்டத்தின் மீது தீராத காதலாம், இவரை ஊக்கப்படுத்தும் விதமாக கால்பந்தாட்டம் பற்றி கற்றுக் கொடுக்கிறாராம் ரொனால்டோ.
இந்நிலையில் ஸ்பெயினில் சிறுவர்களுக்காக நடந்த போட்டியில், போஜீலோஸ் அணியில் அறிமுக வீரராக களமிறங்கி விளையாடியுள்ளார் கிறிஸ்டியானோ ஜீனியர்.
அப்போது மகனுக்கு களத்தில் இருந்து வெளியே வரும் பந்துகளை எடுத்துக் கொடுத்தாராம் ரொனால்டோ.