Breaking News

தக்காளியில் இத்தனை ஆபத்தா?

பெரும்பாலும் அன்றாட உணவில் காய்கறிகள் பயன்படுத்தினால் உடலுக்கு ஆரோக்கியம் பெருகும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். இந்த காய்கறிகளில் சில தீங்குகள் விளைவிக்கும் வகையில் உள்ளது. அவ்வாறு தீங்கு தரக்கூடியவைகளில் த’காளியும் ஒன்று. த’காளியில் நன்மைகள் இருந்தாலும், தீமைகளும் உள்ளது. அது குறித்த தகவல்
தக்காளியில் அதிக அளவு அமில தன்மை இருப்பதால், நமது உடலின் உணவு குழலை பாதித்து நெஞ்சு எரிச்சல் மற்றும் அஜீரண கோளாறுகள் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.

பைத்தோகெமிக்கலா ஐசோபீன்கள் மற்றும் லைகோபீன் தக்காளியில் அதிகமாக காணப்படுகிறது. எனவே இது பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் போன்ற தொற்றுகளில் இருந்து எதிர்த்து போராடும் செயல்திறனை குறைக்கிறது.

தக்காளியில் இருக்கும் ஐபோபீன்கள் ஆண்டுகளின் புரோஸ்டேட் என்னும சுரப்பியை பாதித்து சிறுநீர் தொடர்பான புற்று நோய் போன்ற பல பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.

தக்காளி மற்றும் அதன் விதைகளிலல் கால்சியம், ஆக்சலேட் போன்றவை அதிகமாக நிறைந்துள்ளது. எனவே இது நமது உடலில் உள்ள சீறுநீரக கற்களை உருவாக்கி அதிக வலியை ஏற்படுத்துகிறது.
தக்காளியில் இருக்கும் லைகோபீன் காரணமாக குடல் நோய் கோளாறுகள் மற்றும் எரிச்சல், வலி போன்ற குடல் சம்பந்தமான பிரச்னைகளை தோற்றுவிக்கிறது.

தக்காளியில் ஒரு சிலருக்கு ஒவ்வாமையாக இருந்து அதை சாப்பிடும்போது, அவர்களுக்கு தோல்கள் மீது எரிச்சல், தடித்தல், படைகள் மற்றும் கொப்புளங்கள் போன்ற தோல் சம்பந்தமான பல பிரச்னைகள் வருகிறது.

தக்காளியில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது. எனவே இதை அதிகமாக உணவில் சேர்த்து சாப்பிடுவதால் குமட்டல், வாந்தி, மயக்கம் போன்ற கடுமையான வயிற்று போக்குகள் கண்கள், உதடுகள் பாதிப்பு உடல் வீக்கம் போன்ற பல்வேறு பிரச்னைகளை உண்டாக்குகிறது.