Breaking News

தண்டவாளத்தை கடக்க முயன்ற பக்தர்கள் ரயில் மோதுண்டத்தில் குழந்தை உட்பட 6 பேர் பலி

பீகாரில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில் 6 பெண்கள் பரிதாபமாக பலியானார்கள்.

வட மாநிலங்களில் ஆண்டு தோறும் சூரிய பகவானையும், அவரது மனைவியான உஷா தேவியையும் வழிபாடு செய்யும் சாட் பூஜை நான்கு நாட்களுக்கு வெகு சிறப்பாக நடத்தப்படுவது வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டு சாட் பூஜைக்காக பீகார் மாநிலத்தின் டர்பங்கா மாவட்டத்தில் நடந்த சாத் திருவிழாவுக்கு ஏராளமான பெண் பக்தர்கள் வந்திருந்தனர்.


பூஜையை முடித்து விட்டு அவர்களில் சிலர் இன்று காலை இங்குள்ள ராம்பத்ராபூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அப்போது அந்த பாதை வழியாக டெல்லியில் இருந்து வேகமாக சுதந்திரா சேனானி எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 6 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.


இந்த சம்பவத்தர் ஆத்திரமடைந்த பக்தர்கள் ராம்பத்ராபூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தின் குறுக்கே அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் இன்று காலை அவ்வழியாக செல்லும் பல ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டது.