கோல் போடும் நேரத்தில் நேர்ந்த விபரீதம் !!
துருக்கி நாட்டில் கிளப் அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி நடைபெற்றது. இதில் பெனர்பேசஸ் கிளப் அணியும், அக்ஷர் கிளப் அணியும் மோதின. இப்போட்டியின் ஆரம்பத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் சற்று ஆக்ரோஷமாக விளையாட ஆரம்பித்தனர். இதில் ஆரம்பத்தில் பெனர்பேசஸ் அணி சார்பாக வான்பெர்சி (33). முதல் கோல் அடித்தார். இதன் காரணமாக எதிரணி வீரர்கள் சற்று ஆக்ரோஷத்தை அதிகப்படுத்தி விளையாடினர்.
இதன் விளைவாக வான் பெர்சி பேனால்டி பகுதியில் பந்தை லாவகமாக எடுத்து செல்ல முயற்சி செய்தபோது எதிரணி வீரரின் கைவிரல் அவருடைய இடது கண்ணில் பட்டதால் அவர் அந்த இடத்திலேயே கீழே விழுந்து துடித்தார்.
அதன்பின்னர் விரைந்து வந்த டாக்டர்கள் அவருடைய கண்ணை திறந்த பார்த்தபோது கண் முழுவதும் இரத்தம் வழிந்ததால் அதிர்ச்சி அடைந்து மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர்.
இது குறித்து டாக்டர்கள் கூறுகையில், அவருக்கு பெரிய ஆபத்து எதுவும் இல்லை. விரைவில் குணமடைந்து விடுவார். அவருக்கு பல பரிசோதனைகள் மேற்கொண்டு வருகிறோம் எனவும் தெரிவித்து உள்ளனர்.