Breaking News

மீட்டும் செயலிழந்தது நுரைச்சோலை மின்பிறப்பாக்கி !!

நுரைச்சோலை அனல் மின்நிலையத்தினது இரண்டாவது மின்பிறப்பாக்ககியினதும் லக்சபான மின் நிலையத்தின் செயற்பாடுகளும் நேற்று(16) செயலிழந்த நிலையில், லக்சபான மின் உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக் ஷன ஜெயவர்தன குறிப்பிட்டுள்ளார். இதேவேளை ஏற்கனவே செயலிழந்த நுரைச்சோலை அனல் மின்நிலையத்தினது முதலாவது மின்பிறப்பாக்கியின் செயற்பாடுகள் தற்போது வழமைக்கு திரும்பியுள்ள நிலையில் தற்போது செயலிழந்துள்ள இரண்டாவது மின்பிறப்பாக்ககியினை திருத்துவதற்குரிய நடவடிக்கைகைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.