Breaking News

வெள்ளவத்தையில் மீண்டும் பொலிஸ் பதிவு !!

கொழும்பின் வௌ்ளவத்தை பகுதியில் வசிப்போரை பதிவு செய்வதற்காக போலிசாரால்  படிவங்கள், நேற்றயதினம் வழங்கப்பட்டமை குறித்து  பொலிஸ் ஊடகப்பிரிவின் பணிப்பாளர் ருவன் குணசேகர தெரிவிகையில் எந்த​வொரு பிரதேசத்திலும், எந்தவொரு நபரிடமும், அவர்களின் இருப்பிடத்தைப் பதிவு செய்யுமாறு ​கோரிக்கை விடுக்க, பொலிஸாருக்கு முடியும் மெனவும் பொலிஸ் கட்டளைச் சட்டத்தில் அதற்கு இடமுண்டு எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவிகையில் வெள்ளவத்தையில் பொலிஸாரால் விநியோகிக்கப்பட்டதாக கூறப்படும் படிவங்களைப் பூரணப்படுத்த வேண்டாமெனவும், பூரணப்படுத்துவதற்கான தேவை கிடையாது எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.