Breaking News

மட்டக்களப்பு கல்லடியில் பஸ்ஸின் மீது கல்வீச்சு !

இலங்கை போக்குவரத்து சபையின் கல்முனை போக்குவரத்து டிப்போவிற்கு சொந்தமான பஸ்சோன்று நேற்றிரவு கல்முனையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த போது மட்டக்களப்பு, கல்லடியை அண்மித்தபோது கல்வீச்சுக்கு இலக்காகியதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த சம்பவத்தின் போது பயணிகள் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும், பிறிதொரு பேருந்தானது ஒழுங்கு செய்யப்பட்டு இரு மணி நேரங்கள் தாமதமாகவே பயணிகள் பயணத்தை தொடரக்கூடியதாக இருந்ததாகவும், சமபவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை  பொலிசார் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.