Breaking News

ஏழு அடி உயரமான கஞ்சா செடி மீட்பு

முதன் முறையாக கிளிநொச்சி மாவட்டத்தில்  ஏழு அடி உயரமான கஞ்சா செடி மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது, கிளிநொச்சியின் மலையாளபுரம் பகுதியில் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறுவது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசேட தேடுதலின்போதே குறித்தசெடியும் 25 லீட்டர் கள்ளச்சாராயமும் மீட்கப்பட்டுள்ளது குறித்த சம்பவத்த்துடன் தொடர்புடைய சந்தேக நபரை இன்று (15) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.