Breaking News

மண்முனை வடக்கு பிரதேச செயலக சமூக சேவைகள் பிரிவினால் நடத்தப்பட்ட மாற்றுத்திரனாளிகள் தின நிகழ்வு.

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக சமூக சேவைகள் பிரிவினால் நடத்தப்பட்ட மாற்றுத்திரனாளிகள் தின நிகழ்வு  22.12.2016 வியாழக்கிழமை 22.12.2016  வியாழக்கிழமை மட்டக்களப்பு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் மண்முனை வடக்கு பிரதேச செயலக சமூக சேவைகள் பிரிவினால்                      நடத்தப்பட்ட மாற்றுத்திரனாளிகள் தின நிகழ்வும் "தடைகளே படிகளாக " எனும் மலர் வெளியீட்டு நிகழ்வும் 
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராசா தலைமையில்  பிரதேச செயலக டேபா மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்       திருமதி .பி .எஸ் .எம் .சார்ள்ஸ்   கலந்துகொண்டார். 

குறித்த நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மண்முனை வடக்கு  செயலக  உதவி பிரதேச  செயலாளர்  எஸ்.யோகராஜாமட்டக்களப்பு மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் எஸ்.அருள்மொழிகெமிட்  நிகழ்ச்சித்திட்ட இயக்குனர்  கே.காண்டீபன்  ஆகியோர் கலந்துகொண்டனர்

இந்தநிகழ்வில்  தரிசனம்வாழ்வோசை,ஓசாணம்மென்கப்புகலிடம் ஆகிய நிறுவன மாணவர்களும் ,ஆசிரியர்களும் , பிரதேச செயலக அலுவலக உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் நடைபெற்ற நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் இவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
(லியோன்)