Breaking News

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் 22.12.2016 வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்வி அமைச்சின் ஒழுங்கமைப்பில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மாணவர்களினால் ஒத்துழைப்புடன் வருடா வருடம் டிசம்பர் மாதங்களில் இலங்கையில் தெரிவு செய்யப்பட்ட மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட பாடசாலைகளில் ஆங்கிலம், கணணி மற்றும் தலைமைத்துவம் தொடர்பான கல்வி பயிற்சி பட்டறைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதன் கீழ்  மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு வலயக்கல்வித் திணைக்களத்தின்  ஒழுங்கமைப்புடன் மட்டக்களப்பு கல்வி வலயத்தில் தெரிவு செய்யப்பட மட்டக்களப்பு மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் தரம் 10 மாணவர்களுக்கான ஆங்கிலம், கணணி மற்றும் தலைமைத்துவம் போன்ற பயிற்சி பட்டறை  கடந்த 12.12.2016   தொடக்கம் 22.12.2016  வரை நடைபெற்றது.

இதன் இறுதி நாள் நிகழ்வாக  இந்த பயிற்சி பட்டறையில் நடத்திய சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக  மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று வித்தியாலய அதிபர் ஸ்ரீதரன் தலைமையில் 22.12.2016 வியாழக்கிழமை 22.12.2016 வியாழக்கிழமை பாடசாலையில் நடைபெற்றது.


இந்நிகழ்வில் மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன், ஏறாவூர் பற்று கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.பாலசுப்பிரமணியம், வலய தமிழ் உதவிக் கல்விப்பணிப்பாளர் யுவராஜன், வலய ஆங்கில உதவிக் கல்விப்பணிப்பாளர், பாடசாலை பிரதி அதிபர் எம்.பகிரதன் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
(லியோன்)