Breaking News

பிரம்மா குமாரிகள் இராஜ யோக தங்குமிட கட்டிட தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.

மட்டக்களப்பு பிரம்மா குமாரிகள் இராஜ யோக நிலைய தங்குமிட கட்டிட தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 22.12.2016 வியாழக்கிழமை   இடம்பெற்றது.

மட்டக்களப்பு நகரில் பிரதான  பிரம்மா குமாரிகள் இராஜ யோக நிலையத்தினையும்  மட்டக்களப்பு மாவட்டத்தில் 40 மேற்பட்ட உப நிலையங்களையும் கொண்டு இயங்கி வரும் பிரம்மா குமாரிகள் இராஜ யோக நிலையமாகும்.


பிரம்மா குமாரிகள் இராஜ யோக நிலைய அங்கத்தவர்களுக்கு தங்குவதற்கு தங்குமிட வசதிகள் இன்றி இயங்கி வந்த நிலையில் தற்போது சுமார் 200 பேர் வரை தங்க கூடிய வகையில் நான்கு மாடி கட்டிட தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு மட்டக்களப்பு பிரம்மா குமாரிகள் இராஜ யோக நிலைய இயக்குனர் சுரேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இந்த  நிகழ்வில் பிரதம விருந்தினராக பிரம்மா குமாரிகள் இராஜ யோக இலங்கைக்கான பொறுப்பாளர் சகோதரர் கணேஷ் , யாழ்ப்பாணம் பிரம்மா குமாரிகள் இராஜ யோக நிலையபொறுப்பாளர் சகோதரி ரஞ்சி ஆகியோர் கலந்துகொண்டு கட்டிடத்திற்கான அடிக்கலை நாட்டி வைத்தனர்.

குறித்த நிகழ்வில் மட்டக்களப்பு வர்த்தக சங்க உறுப்பினர்கள், கல்வி திணைக்கள அதிகாரிகள், ஒய்வு நிலை நீதிபதி, கிராம சேவையாளர் மற்றும் பிரம்மா குமாரிகள் இராஜ யோக நிலைய அங்கத்தவர்கள் என பலர் கலந்து கொண்டு கட்டிடத்திற்கான அடிக்கலை நாட்டி வைத்தனர்.
(லியோன்)