ஜெயந்திபுரம் கெத்செமனே கொஸ்பல் ஆலய வருடாந்த ஒளிவிழா.
மட்டக்களப்பு ஜெயந்திபுரம் கெத்செமனே கொஸ்பல்
ஆலய வருடாந்தம் ஒளிவிழா நிகழ்வு ஆலய தலைமை போதகர் அருட்திரு பி.டப்ளியு.மரியதாஸ் தலைமையில் 12.12.2016
ஞாயிற்றுக்கிழமை மாலை மட்டக்களப்பு ஜெயந்திபுரம் கெத்செமனே கொஸ்பல் ஆலயத்தில் நடைபெற்றது.
ஆரம்ப நிகழ்வாக அதிதிகளை மலர்மாலை அணிவித்து பாடசாலை சிறார்களினால் அழைத்து
வரப்பட்டனர்.
இதனை தொடர்ந்து இறைவணக்கத்துடன் மாணவர்களின் ஒளிவிழா கலைநிகழ்வுகள் இடம்பெற்றது.
ஒளிவிழா நிகழ்வில் அதிதிகளாக போதகர்
சங்க தலைவர் அருட்திரு எஸ் . புவனேந்திரன், லைட் ஹவுஸ் ஆலய போதகர் அருட்திரு கே.விஜயன், மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதி கல்விப்பணிப்பாளர் எம்.ஹரிகரராஜ், ஓய்வுநிலை கோட்டக்கல்விப் பணிப்பாளர் டேவிட், ஏறாவூர் பற்று உதவி
பிரதேச செயலாளர் திருமதி.என்.முகுந்தன், கிராம சேவை உத்தியோகத்தர் வி.லவகுமார், ஜெயந்திபுரம் கிராம அபிவிருத்தி சங்க தலைவர்
தோமஸ் கந்தையா, ஜெயந்திபுரம் கிராம அபிவிருத்தி சங்க செயலாளர் எஸ்.முகுந்தன்
மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது ஒளிவிழா நிகழ்வில் கலந்துகொண்ட
அதிதிகளினால் பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.
(லியோன்)