மறைக்கல்வி நடுநிலைய ஒளிவிழா மற்றும் பரிசளிப்பு நிகழ்வு
(லியோன்)
மட்டக்களப்பு மறைக்கோட்ட மறைக்கல்வி
நடுநிலைய ஒளிவிழா மற்றும் பரிசளிப்பு நிகழ்வு இன்று (13) செவ்வாய்கிழமை மட்டக்களப்பு மறைக்கல்வி நடுநிலையத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மறைக்கல்வி நடுநிலைய
இயக்குனர் அருட்தந்தை எ .யேசுதாசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம
விருந்தினராக மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகை மற்றும்
மட்டக்களப்பு மறைக்கோட்ட ஆலய பங்கு அருட்தந்தையர்கள் ,அருட்சகோதரிகள் ,மறைக்கல்வி ஆசிரியர்கள் , மறைக்கல்வி மாணவர்கள் ,
பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது மட்டக்களப்பு மறைக்கோட்ட பங்கு
மறைக்கல்வி மாணவர்களின் பல்வேறு கலை
நிகழ்வுகள் நடைபெற்றது.
ஒளிவிழாவினை சிறப்பிக்கும் வகையில் நத்தார்
செய்தியை மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகை வழங்கியதுடன் நத்தார் பாப்பா வருகைதந்து
ஆடிப்பாடி அனைவரையும் மகிழ்வித்தார்.
இதன்போது மட்டக்களப்பு மறைக்கோட்ட ஆலய
பங்குகளின் மறைக்கல்வி ஆசிரியர்கள் மற்றும் மறைக்கல்வி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட
போட்டி பரீட்சையில்
சித்தியடைந்தவர்களுக்கும் மற்றும் தரம்
ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த பாடசாலை மாணவர்களுக்கும் பரிசில்களும்
வழங்கிவைக்கப்பட்டன.