பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிப்பு
(லியோன்)
மட்டக்களப்பு மாவட்ட முன்னாள்
பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில்
கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள முதலமைச்சரும் தமிழ் மக்கள்
விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட நான்கு
பேரின் விளக்கமறில் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது.
இன்று
புதன்கிழமை காலை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது
எதிர்வரும் டிசசெம்பர் 28 ஆம்
திகதிவரை விளக்கமறியலில் வைக்கும் உத்தரவினை நீதவான் நீதிமன்ற நீதிபதி
எம்.கணேசராஜா உத்தரவிட்டார்.
கிழக்கு
மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித்; தலைவருமான சிவநேசதுரை
சந்திரகாந்தன், தமிழ்
மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள்
மாகாணசபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா
கிருஸ்ணானந்தராஜா, கஜன் மாமா
எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவ புலனாய்வு உத்தியோகஸ்தர் எம்.கலீல்
ஆகியோருக்கே விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற
உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005ஆம் ஆண்டு
மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்தில்; நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்துகொண்டிருந்தபோது
சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றப்
புலனாய்வுப் பிரிவினர் கடந்த 11.10.2015
அன்று
சிவநேசதுரை சந்திரகாந்தனை கைதுசெய்திருந்தனர்.