ATM இயந்திரங்களில் கமராக்களை பொருத்தி வாடிக்கையாளர்களின் தகவல்களைத் திருடிய பல்கேரியர்கள் கைது !!!
கெமராக்களை ATM இயந்திரங்களில் பொருத்தி வாடிக்கையாளர்களின் தகவல்களைத் திருடிய நான்கு பல்கேரிய பிரஜைகளை காலி, மிரிஸ்ஸ பகுதியில் பொலிஸார் கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நால்வரும் மாத்தறை பிரதம நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவர்களை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தவிட்டுளார்.