கல்லடி உப்போடை விவேகானந்த மகளிர் மகா வித்தியாலய மாணவிகள் 3 பேர் மருத்துவத் துறைக்கு தெரிவாகியுள்ளனர்.
வெளியாகியுள்ள க.பொ.த உயர்தர பரீட்சையில் மட்டக்களப்பு கல்வி வலயத்தின்
மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்த மகளிர் மகா வித்தியாலய மாணவிகள் 31 பேர் பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இதில் 03 மாணவிகள் மருத்துவத் துறைக்கு தெரிவாகியுள்ளனர்.
இதன் அடிப்படையில் செல்வி சிவரஞ்சன்
சிவாஞ்சலி உயிரியல் விஞ்ஞான பிரிவில் மாவட்ட மட்டத்தில் 03 ஆம் நிலையினையும் செல்வி.மயில்வாகனம் பிரியங்கரி உயிரியல் விஞ்ஞான
பிரிவில் மாவட்ட மட்டத்தில் 09 ஆம்
நிலையினையும், செல்வி.இராஜபாரதி
சஞ்சிதா உயிரியல் விஞ்ஞான பிரிவில் மாவட்ட
மட்டத்தில் 28 ஆம்
நிலையினையும் பெற்றுள்ளார்.
இதனைவிட பௌதிக உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் 09 மாணவிகளும், வர்த்தகப்பிரிவில் 06 மாணவிகளும் கலைப்பிரிவில் 13 மாணவிகளும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளனர்.
இவ்வாறு பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி பாடசாலைக்கும் பெருமை சேர்த்த மாணவிகளை அதிபர் திருமதி திலகவதி ஹரிதாஸ் கற்பித்த
ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், பழைய மாணவர்கள்,
பாடசாலை கல்வி சார சமூகங்கள் பாராட்டுக்களை
தெரிவித்து கொள்கின்றனர்.
(லியோன்)