Breaking News

ஜனாதிபதி இரண்டு வருட பூர்த்தியை முன்னிட்டு மட்டக்களப்பு மரியாள் பேராலயத்தில் விசேட திருப்பலி ஆராதனை.

2015 ஆம்  ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் திகதி இந்த நாட்டின் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவுசெய்யப்பட்டு இரண்டு வருட பூர்த்தியை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதியின் இரண்டு வருட பதவியேற்பினை சிறப்பிக்கும் முகமாக ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் 08.01.2016 ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றன.

இதற்கு அமைய மட்டக்களப்பு மரியாள் பேராலயத்தில் பங்கு தந்தை எ.தேவதாசன் தலைமையில் விசேட திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டது.

இந்த விசேட திருப்பலி ஆராதனையில் அருட்தந்தையர்கள் அருட்சகோதரிகள் மட்டக்களப்பு மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பொதுமக்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.
(லியோன்)