Breaking News

நமீதாவுக்கு தொல்லை கொடுக்க கூடாது! நீதிமன்றத் தீர்ப்பு !!

நமீதா வாடகைக்கு குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் அவ்வப்போது வந்து வாடகை விஷயமாக தொல்லை கொடுத்து வருகிறாராம்.

பொறுத்து பொறுத்து பார்த்த நமீதா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். ஆனால் காவல் நிலையம் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் சென்னை சிவில் நீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்

இந்த வழக்கின் விசாரணை இன்று வந்தது. வழக்கை விசாரணை செய்த நீதிபதி நமீதாவுக்கு வீட்டை காலிசெய்யச் சொல்லி தொல்லை கொடுக்கக்கூடாது என்று வீட்டு உரிமையாளருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.