Breaking News

இரண்டு பெண்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்குத் தூக்கு !!!

தடிகளினால் தாக்கி 44 வயதான ஒருவரை, கொலை செய்தனர் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட ஐவருக்கு, மாத்தறை மேல் நீதிமன்ற நீதிபதி மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார். காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தமையே, குறித்த பெண்ணை கொலைசெய்தமைக்கான காரணமாக தெரிவிக்கப்படுகின்றது.