Breaking News

நீலப்படத்தில் நடிக்க முடிவெடுத்தேன் - 3 தேசிய விருதுகளை பெற்ற நடிகை பரபரப்பு பேட்டி !!!

நீலப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு தனக்கு வந்ததாகவும், வேறு வழியில்லாமல் அதில் நடிக்க முடிவெடுத்திருந்ததாகவும் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.

தற்போது பாலிவுட்  படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருவதோடு, இதுவரை 3 தேசிய விருதுகளை பெற்றவர் நடிகை கங்கனா ரனாவத். 

இவர் சமீபத்தில் திரையுலகில் அவர் கடந்து வந்த அனுபவங்களை பற்றி செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:

எனக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காத நேரத்தில், ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதற்கான போட்டோ ஷூட்டும் நடத்தினார்கள். உடலின் அங்கமெல்லாம தெரியும் படி உடை அணியுமாறு கூறினார்கள். அது நீலப்படம் என நினைக்கிறேன். இது சரியில்லை என நினைத்தேன். 

வேறு வழியில்லாமல் நீலப்படத்தில் நடிக்க முடிவெடுத்திருந்த நேரத்தில்தான் எனக்கு கேங்ஸ்டர் பட வாய்ப்பு கிடைத்தது. அதனால் அந்த நீலப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டேன். ஒருவேளை கேங்ஸ்டர் பட வாய்ப்பு கிடைக்காமல் போயிருந்தால், அந்த நீலப்படத்தில் நடித்திருப்பேன். என்னை தேடி வரும் அனைத்து வாய்ப்புகளையும் ஏற்றுக்கொள்ள நான் தயாராக இருந்தேன்” என்று கூறினார்.

கேங்ஸ்டர் படத்திற்காக கங்னா ரனாவத் 5 விருதுகளை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.