Breaking News

இலங்கயிலும் மொபைல் அப் வழியே ஜனாதிபதியிடம் முறையிடும் வசதி நாளைமுதல் !!!

அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் நடைமுறையில் உள்ளவாறு இலங்கையிலும்  ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் ஆரம்பிக்கப்பட்ட  'ஜனாதிபதியிடம் தெரிவியுங்கள்' திட்டத்தினை மேலும் இலகு படுத்தும் வகையில் ஸ்மார்ட்போன்களுக்கான அப் நாளை  வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த அப்பினை உபயோகித்து மக்கள் ஜனாதிபதி செயலகத்தைத் தொடர்பு கொண்டு தமது முறைப்பாடுகளை தெரிவிக்கும் வசதியுடன் முறைப்பாடு குறித்த மேலதிக தகவல்களையும்  பாவனையாளர் பெறுவதற்கும் ஏற்றவகையில் வசதிகளை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.