புறா திருடியவர் கைது !
புத்தளம், காரைதீவுப் பகுதியியைசேர்ந்த பாடசாலை ஆசிரியர் ஒருவரால், கூடொன்றில் வளர்க்கப்பட்டு வந்த ரூபா 288,000 பெறுமதியான 38 புறாக்களை திருடிய 22 வயதுடைய மீனவர் ஒருவரை, பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம், அவரிடமிருந்து சில புறாக்களை மாத்திரம் மீட்கப்பட்டுள்ளதாகவும் மிகுதி புறாக்களை அவர் விற்பனை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.