Breaking News

தனது முதல் குழந்தையை பார்க்க மறுத்தராம் நாகேஷ்… ?!

நாகேஷின் நினைவு தினம் இன்று. நாகேஷ் கன்னடத்தை பிறபிறப்பிடமாகக்கொண்டவர் அவருக்கு 1951 ம் ஆண்டு போட்ட அம்மையினால் முகம் முழுவதும் நிரந்தர வடுக்கள் இருக்க , அவரின் அம்மா கொடுத்த ஆறுதலினால் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியவர்.

அவர் திருமணம் செய்து, அவருக்கு முதல் குழந்தை பிறந்துள்ளது என்ற தகவல் வந்துள்ளது. அதுவும் ஆண் குழந்தை. ஷூட்டிங்கில் இருந்த நாகேஷுக்கு தகவல் சொல்லப்பட்டது. ஆனால், அவர் போய் பார்க்க விரும்பவில்லை. ஏன் என்று எல்லோரும் ஆச்சரியப்பட, பாலசந்தர் கேட்டே விட்டாராம்.

” அம்மைத் தழும்புகளால் விகாரமா ன என் முகத்தை பார்த்து குழந்தை . பயந்துவிடாதா?’ என்று அவ்வளவு வருத்தமும், சோகமும் பட்டு சொல்லி இருக்கிறார் நாகேஷ் . உடனே பாலசந்தர், ‘டேய்… உன் அழகு உன் முகத்தில் இல்லை. நடிப்பில் இருக்கிறது. முதலில் குழந்தையை போய் பார் ’ என்று சொல்லவும், மனம் தெளிந்து பிள்ளையை பார்க்க வந்தாராம் நாகேஷ்.