Breaking News

கிராம சேவையாளரின் சேவை நலனை பாராட்டில் கௌரவிக்கும் நிகழ்வு

கிராம சேவையாளரின் சேவை நலனை பாராட்டில் கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு ஜெயந்திபுரத்தில் (26) ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது .

மட்டக்களப்பு ஜெயந்திபுரம்  கிராம பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில்  மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஜெயந்திபுரம் கிராமத்தில்  கிராம சேவையாளராக சேவையாற்றும்   கிராம சேவையாளர்  வி .லவகுமாரின்  சேவை நலனை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு ஜெயந்திபுரம் சிரேஷ்ட பிரஜைகளின்  அலுவலக  மண்டபத்தில் நடைபெற்றது .

கிராம சேவையாளரின் சேவையினை கௌரவிக்கும் முகமாக கிராம மட்டத்தில் இயங்குகின்ற  அமைப்புக்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற  நிகழ்வு அனைத்து அமைப்புக்களின் பங்களிப்புடன் மிக சிறப்பாக நடைபெற்றது .


இந்த பாராட்டு நிகழ்வில் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் ,திவிநெகும வாழ்வின் எழுச்சி சமுர்த்தி உத்தியோகத்தர், கிராம சமுர்த்தி சங்கங்களின் உறுப்பினர்கள் ,சிறுவர் கழகத்தினர் ,  ஜெயந்திபுரம் இளைஞர் சேவை மன்றம் உறுப்பினர்கள் ,கிராம மாதர் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் , கிராம முதியோர் சங்க உறுப்பினர்கள் , பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர் (லியோன்)