Breaking News

மட்டக்களப்பு நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் யுவதிகள் இருவர் படுகாயமடைந்த நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

மட்டக்களப்பு நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் யுவதிகள் இருவர்   படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் .

மட்டக்களப்பு கல்முனை பிரதான விதியின் பொலிஸ் விடுதிக் கட்டடத்துக்கு முன்னாள் பிரதான வீதியில் வலது பக்கமாக எதிரே நடந்து வந்த  இரண்டு யுவதிகள் மீது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் செலுத்திய  வாகனம் மோதியன் காரணமாக  யுவதிகள் இருவர்  படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில்   அனுமதிக்கப்பட்டுள்ளதாக  பொலிசார் தெரிவித்தனர் .

(08) புதன்கிழமை இடம்பெற்ற  குறித்த சம்பவத்தின் போது  வவுணதீவு பாவக்கொடிச்சேனை பகுதியை சேர்ந்த யுவதிகளே இவ்வாறு விபத்திற்குள்ளானதாகவும்  குறித்த சம்பவத்தின் போது வானகத்தை செலுத்திய பொலிஸ் உத்தியோகத்தார்   கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்  தெரிவிக்கின்றனர் .

இதேவேளை இந்த விபத்து தொடர்பான சிசி டிவி காணொளி பதிவுகள் முன்னாள் உள்ள வர்த்தக நிலையத்தில் இருந்து எடுக்கப்பட்டு  விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும்  பொலிசார் தெரிவிக்கின்றனர். (லியோன் )