66 பாடசாலைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை !
கிண்ணியா கல்வி வலயத்தினுள் இயங்கும் 66 பாடசாலைகளு இன்று 15 ஆம் திகதி தொடக்கம் மூன்று நாட்கள் மூடப்படவிருப்பதாக கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.அஹமட்லெப்பை குறிப்பிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிண்ணியாவில் தொடரும் டெங்கு நோய்த் தாக்கத்தினால் இது 14 வரையிலும் 12 பேர் மரணித்துள்ள நிலையில், பாடசாலைக்கு வருகைதரும் மாணவர்களினதும், ஆசிரியர்களினதும் வருகையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் இக்காரணங்களை முன்னிட்டு எதிர்வரும் 17ஆம் திகதி வரையிலும் பாடசாலை மூடப்படும் எனத்தெரிவிக்கப்படுகின்றது.