Breaking News

“மாற்றத்திற்கு தைரியத்துடன் முன் நிற்போம்" மகளிர் சுய உதவிக்குழுக்களின் சர்வதே மகளிர் தின விசேட நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்ட மகளிர் சுய உதவிக்குழுக்களின் சர்வதே மகளிர் தின விசேட  நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது .

குடும்ப மற்றும் கிராம மட்ட சமூக பொருளாதார அபிவிருத்தியில் பெண்களின் பங்களிப்பை மேம்படுத்தும் நோக்காக கொண்டு  அம்கோர் நிறுவனத்தின் வழிகாட்டலின் கீழ் இயங்கும்  மட்டக்களப்பு மாவட்டத்தின் 15 கிராமங்களின் மகளிர் சுய உதவிக்குழுக்களின் ஒழுங்கமைப்பில்  2017 ஆண்டிற்கான சர்வதேச மகளிர் தினத்தை சிறப்பிக்கும்  விசேட நிகழ்வு  (11) சனிக்கிழமை மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது .

“மாற்றத்திற்கு தைரியத்துடன் முன் நிற்போம்" எனும் தொனிப்பொருளில் “சுமார் 1500 பெண்கள் இணைந்து முன்னெடுக்கப்பட்ட  மகளிர் சுய உதவிக்குழுக்களின் சர்வதே மகளிர் தின நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ் .எம் .சாள்ஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்தார் .

இதன்  ஆரம்ப நிகழ்வு மட்டக்களப்பு GV வைத்தியசாலைக்கு முன்பாக இருந்து பேரணி ஆரம்பிக்கப்பட்டது .


இந்த பேரணி நிகழ்வில் அம்கோர் நிறுவன உத்தியோகத்தர்கள்  , அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் , அரச திணைக்கள அதிகாரிகள் மற்றும்  மாவட்ட மகளிர் சுய உதவிக்குழுக்களின் மகளிர் உட்பட பலர் கலந்துகொண்டனர் . (லியோன்)