சிந்கிதி மற்றும் குருளைச் சாரணர்களுக்கும் விசேட தேவையுடைய மாணவர்களுக்குமான ஒன்று கூடல்
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு
புனித மிகேல் கல்லூரியின் சிந்கிதி
மற்றும் குருளைச் சாரணர் மாணவர்களுக்கும்
மட்டக்களப்பு கிறிஸ்தவ வாலிப சங்க வாழ்வோசை விசேட தேவையுடைய மாணவர்களுக்கும்
இடையிலான ஒரு நாள் ஒன்று கூடல் நிகழ்வு மட்டக்களப்பு கிறிஸ்தவ வாலிப சங்க
மண்டபத்தில் இன்று நடைபெற்றது .
இந்த ஒன்று கூடல் நிகழ்வில் விசேட தேவையுடைய மாணவர்களுடன் சாதாரண
மாணவர்களின் செயல்பாட்டை புரிந்து கொள்ளும் விதத்தில் அனைவரும் சமம் எனும்
மனப்பாங்கு விருத்திபெறல் , நல்ல அம்சங்களை கற்றல் போன்ற விடயங்களாக இடம்பெற்றது.
இதில் ஆக்க செயல்பாடுகள் ,
சித்திரம் , நடனம் , உணவு பரிமாட்டறம் ,இவர்களுக்கிடையிலான சுகுகமான உரையாடல்
போன்ற விடயங்கள் முன்னெடுக்கப்பட்டன .
இந்த ஒன்றுகூடல் நிகழ்வில் புனித
மிகேல் கல்லூரி சிந்கிதி மற்றும் குருளைச்
சாரணர் ஆசிரியர்கள் , கிறிஸ்தவ வாலிப சங்க
வாழ்வோசை பாடசாலை ஆசிரியர்கள்
,மாணவர்கள் கலந்துகொண்டனர் (லியோன்)