போதைப்பொருள் மற்றும் புகைத்தல் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு
போதைப்பொருள் மற்றும் புகைத்தல்
தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு மட்டக்களப்பு கொக்குவில்
கிராமத்தில் நடைபெற்றது
மட்டக்களப்பு இருதயபுரம் வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கியின் ஏற்பாட்டில் மண்முனை
வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட பனிச்சையடி , கொக்குவில் ,சத்துருக்கொண்டான்
ஆகிய கிராம சேவை பிரிவு கிராம மக்களுக்கான போதைப்பொருள்
மற்றும் புகைத்தல் தடுப்பு தொடர்பான ஒருநாள் விழிப்புணர்வு கருத்தரங்கு இருதயபுரம் வாழ்வின் எழுச்சி
சமுதாய அடிப்படை வங்கி முகாமையாளர் செல்வி
பி .சாமினி தலைமையில் மட்டக்களப்பு
கொக்குவில் கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் (23) வியாழக்கிழமை நடைபெற்றது .
மதுபாவனையில் முதல் இடத்தினைப்பெற்ற மாவட்டமாக
அடையாளப்படுத்தப்பட்டுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது போதைப்பொருள் ,
புகைத்தல் அதிகரித்து
வருகின்ற நிலையில் இவற்றை ஒழிப்பதற்கான நடவடிக்கை தொடர்பில் பல விழிப்புணர்வூட்டும் நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந் நிலையில் புகைபிடித்தல், மதுபாவனை ,போதைப்பொருள் பாவனையை கிராம மட்டத்தில் இல்லாதொழித்து
ஆரோக்கியமாக வாழ்வோம் என்ற நிலையினை தெளிவு படுத்தும் கருத்தரங்காக
நடத்தப்பட்டது .
இந்நிகழ்வில் வளவாளராக பெண்களின் தேவைக்கான பரிந்துரை செய்யும்
வலையமைப்பின் இனைப்பாளர் திருமதி ஆர் .ருத்ராதேவி
மற்றும் திவிநெகும முகாமைத்துவ
பணிப்பாளர் திருமதி . கே .நிர்மலா , நிர்வாக உத்தியோகத்தர் எஸ்
.விஜேகுமார் , சமுர்த்தி
உத்தியோகத்தர்கள் , ,சமுர்த்தி பயனாளிகள் ,பொதுமக்கள் என பலர்
கலந்துகொண்டனர் (லியோன்)