முன்னாள் அமைச்சர் பஷீர் கொழும்பு குற்றவியல் தடுப்புப் பிரிவினரால் விசாரணை !
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளர் பஷீர் சேகுதாவூத்திடம் பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினர் மூன்று மணிநேரம் தடுத்துவைத்து விசாரணைசெய்துள்ளனர்.
இதற்கு முன் இரண்டு தடவைகள் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்த போதும் சில அமைச்சர்களின் உதவியுடன் சமூகமளிக்காது இருந்தபோதிலும் குற்றத் தடுப்புப் பிரிவின் கடுமையான எச்சரிக்கையின் பின்னர் இன்று பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவில் ஆஜரானார்.
இந்நிலையில் மூன்று மணித்தியாலமாக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் தடுத்துவைக்கப்பட்டு பஷீர்சேகுதாவூத்திடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது,
தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட உண்மைகள் எனும் முகவரியற்ற புத்தகமொன்றை தனிநபர்களுக்குசேறு பூசும் வித்த்தில் வெ ளியிட்டமை தொடர்பிலேயே பஷீர் சேகுதாவூத்திடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன,
இதன் போது இது தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் முன்வைக்கப்பட்ட ஆதாரங்கள் தொடர்பிங்கள் பஷீர்சேகுதாவூத் எதுவித பதிலும் அளிக்கவில்லை எனதெரிவிக்கப்படுகின்றது,
அத்துடன் குறித்த புத்தகத்தை வெ ளியிட்டமை தொடர்பான பல ஆதாரங்களுடன் பஷீருக்கு தொடர்புள்ளதாகவும் அவருக்கும் அந்த புத்தகத்தை வெளியட்டவர்களுக்கும் இடையில் காணப்படும் தொடர்புகளுக்கான ஆதாரங்களை முன்வைத்தும் பொலிஸார் விசாரணைக ளை முன்னெடுத்துள்ளனர்.
இதன் போது அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சட்டத்தரணிகளில் ஒருவரான சிராஸ் நூர்தீன் இதன் போது பஷீர் சேகுதாவூத்துடன் விசாரணைகளில் பங்கேற்றார்,
தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட உண்மைகள் எனும் நூலுக்கு எதிராக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித்தலைவரும் முதலமைச்சருமான ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்,எச்,எம் சல்மான் ஆகியோர் கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவில் முறைப்படொன்றை பதிவு செய்தனர் .
இதனடிப்படையில் மேறகொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாகவே பஷீர் சேகுதாவூத்திடம் விசாரணைகள் முன்னெடுக்கப்ப்பட்டுள்ளன.
இந்நிலையில் மற்றுமொரு விசாரணைக்கும் பஷீர்சேகுதாவூத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகபொலிஸார் குறிப்பிட்டனர்
இது குறித்த விசாரணைகள் பின்னர் வெளியே வந்த பஷீர்சேகுதாவூத்திடம் ஊடகவியலாளர்கள்கேள்விகளை தொடுக்க முற்பட்ட போதும் அவர் கெமராக்களையும் தள்ளி விட்டு சென்றமை அங்கிருந்த சிங்கள ஊடகவியலாளர்கள் சிலரால் விமர்சிக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.