பாலியல் உறவுக்கு ஒத்துழைக்காத காதலனை அடித்து நொறுக்கிய காதலி.!
தனது காதலன் பாலியல் உறவுக்கு சம்மதிக்காததால் அவரை கடுமையாக தாக்கிய குற்றச்சாட்டில் அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜோர்ஜியா மாநிலத்தைச் சேர்ந்த 35 வயதான டபேதா லீ குரூம்ஸ் எனும் பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார். அகஸ்ட்டா நகரில் தனது காதலரான கார்லோஸ் ரொட்ரெகஸ் கிறேஸ் என்பவருடன் டபேதா லீ வசித்து வருகிறார். ஒருநாள் வெளியில் சென்று விட்டு, இரவு 11.30 மணியளவில் மதுபோதையுடன் டபேதா லீ வீடு திரும்பியதாகவும் அதன்பின் பாலியல் உறவுக்கு மறுத்த காதலர் கார்லோஸ் கிறேஸை தாக்கியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனால் கார்லோஸின் முகம், தலை, கழுத்து உட்பட பல பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வன்முறையின்போது தனது 66 வயதான தாயாரையும் டபேதா தாக்கியுள்ளார். டபேதாவின் காதலர் கார்லோஸ், முகத்தில் இரத்தம் வழிந்த நிலையில், குளியலறைக்குள் ஓடிச்சென்று, அவசர சேவைப் பிரிவுக்கு தகவல் கொடுத்துள்ளார். பொலிஸ் அவ்வீட்டுக்கு வந்தபோது இச்சண்டை குறித்த பொலிஸாரின் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு டபேதா குரூம்ஸ் மறுத்தார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் அதிகாரிகளுடனும் அவர், மோதல் போக்குடன் நடந்து கொண்டார் எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட டபேதா லீ நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.



