2015ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான பரீட்சைக்கான வழிகாட்டல் கருத்தரங்கு இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது
2015ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான பரீட்சைக்கான வழிகாட்டல் கருத்தரங்கு இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது . மட்டக்களப்பு விபுலானந்த வெளிவாரிப் பட்டப்படிப்புக்கள் கல்லூரி ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கான பரீட்சைக்கான வழிகாட்டல் கருத்தரங்கு அகில இலங்கை பிரபல ஆசிரியர் ஜே . ஜெயக்காந்தன் தலைமையில் இன்று மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஆசிரியர்களான எம் விஸ்வநாதன் ,கே .ரசிகரன் ,டி .நாகநாதன் ,கே .மதிசுதன் எஸ் .கிரிசாந்தி ஆகியோர் வளவாலர்களாக கலந்துகொண்டனர் .
(அமிர்தகழி நிருபர்)







