Breaking News

மஹிந்தவால் ஓட முடியாத ஓட்டப் பந்தயம் - தலைகீழாக நின்றாலும் வெல்ல முடியாது

தலைகீழாக நின்றாலும் முன்னாள் ஜனாதிபதிக்கு பிரதமராக முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (24) ஹதரியத்த பிரதேசத்தில் தெரிவித்தார்.

கட்சித் தலைவரும் அவருக்கு ஆதரவளிக்காத நிலையில் அவர் மக்களைப் பற்றி என்ன பேச முடியும் எனவும் பிரதமர் வினா எழுப்பியதோடு ராஜபக்ஷ ஓடுவது வெல்ல முடியாத பந்தயம் என்பதால் அவருக்கு வாக்களிப்பதில் எவ்வித பிரயோசனமும் இல்லை என மக்கள் அறிந்துகொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அவர் தேர்தல் பிரச்சரங்களுக்குச் சென்று வீண் அலைச்சலில் ஈடுபடாது வீட்டில் இருப்பதே சிறந்ததாகும் எனவும் விக்ரமசிங்க தெரிவித்தார்