ISIS போராளியின் குடும்பத்தாரிடம்....
ISIS போராளியின் குடும்பத்தாரிடம்....
ஐ.எஸ்.ஐ.எஸ் போராளியாக சிரியாவில் பலியான இலங்கையரின் குடும்பத்தாரிடம் விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார். மேற்படி போராளியின் மனைவி, குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என அனைவரிடம் விசாரணை நடத்துமாறும் பிரதமர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சரவையின் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனாரத்ன கூறினார்.



